கணேசன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

1 ganesanமலேசிய இண்ட்ராப் இயக்க  ஆலோசகர்  என்.கணேசன், பினாங்கில் என்ஜிஓ-களின் கூட்டத்தில்  கூலிக்கு அமர்த்தப்பட்ட  குண்டர்கள்  புகுந்து கலகம்  செய்ததாக  திரும்பத் திரும்பக் கூறிக்  கொண்டிருந்தாரானால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்திருப்பவர்  ஒரு சாப்பாட்டுக் கடை உரிமையாளரான இரேகேந்திரன்  சிவசாமி,58.

 

கூட்டத்தில் கலகம் செய்த குண்டர்களுக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குடனும் துணை முதலமைச்சர் பி.இராமசாமியுடனும் தொடர்பு உண்டு என்று கூறிய கணேசன், அதற்கு ஆதாரமாக இராகேந்திரன், இராமசாமியுடன் இருக்கும் நிழற்படத்தைக் காண்பித்திருக்கிறார்.

கணேசன் “கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டன்” என்று கூறி தம்மை அவமதித்திருக்கிறார் என்று ஆத்திரப்பட்ட இராகேந்திரன், தாம் அரசியல்வாதிகளின் கையாளும் அல்ல,  குண்டர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனும் அல்ல என்றார்.

“கணேசனும் இண்ட்ராப் இயக்கத்தினரும் என் பெயரைக் கெடுத்து விட்டார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் என் தொழிலைப் பாதிக்கும். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாமா என வழக்குரைஞர்களிடம் ஆலோசனை கேட்கப் போகிறேன்”, என இராகேந்திரன் கூறினார்.

1 ganesan rayarகணேசன் பேச்சால் ஆத்திரமடைந்துள்ள இன்னொருவர் வழக்குரைஞரும் டிஏபி ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என்.இராயர்(வலம்) .  அது தீய நோக்கத்துடன் கூறப்பட்ட குற்றச்சாட்டு என்றாரவர்.

“கணேசன் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிப்போம்”, என்று இராயரும் எச்சரித்தார்.