அன்வார்: ஊழல் நிறையவே நடக்கிறது

anwarஅரசாங்கம் அரசியல், பொருளாதார உருமாற்றத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் ஊழல் ஒழியவில்லை அது பெருகிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

இதற்கு 2013 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் காணலாம். இன்று உலக ஊழல்-எதிர்ப்பு நாளையொட்டி வெளியிட்ட செய்தியில் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“இதிலிருந்து ஊழலை எதிர்த்துப் போராடும் அரசியல் உறுதிப்பாடு அரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர்.