செர்டாங் மருத்துமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்தது

hospitalநேற்று செர்டாங்  மருத்துவமனையில்  உள்கூரை  இடிந்து விழுந்ததில்  மருத்துவமனை  பணியாளர் ஒருவரின் துணைவியாரும்  அவரின் நான்கு  பிள்ளைகளும்  மயிரிழையில் காயமின்றித் தப்பினர்.

2013-இல்,  அம்மருத்துவமனையில் கூரை இடிந்து விழுவது இது நான்காவது  தடவையாகும்.

நேற்று  பிற்பகல் மணிக்குப் பணியாளர் குடியிருப்புப் பகுதியில் ஒரு  கழிப்பறையில்  இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்துசான்  மலேசியா அறிவித்தது.  மருத்துவமனையில் இன்னொரு பகுதியில் கூரை இடிந்து விழுந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

“குடியிருப்புப் பகுதியில்  உள்கூரை மட்டுமல்ல.  தண்ணீர் குழாய்கள், தளவரிசை  போன்றவையும் சேதமடைந்துள்ளன.

“இதனால்,  குடியிருப்பைவிட்டு வெளியேறி,  வெளியில்  வீடுகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள பணியாளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்”, என்றந்த நாளேடு கூறிற்று.