சொத்து வரி உயர்வை எதிர்த்து 20,000 கடிதங்கள்

1 bantahசொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் 20,000-க்கு மேற்பட்ட கடிதங்கள் இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்(டிபிகேஎல்) தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியின் ஒரு பகுதியாக இந்த ஆட்சேபனை தெரிவிக்கும் கடிதங்கள் டிபிகேஎல்-லிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அமைந்திருந்தது.

பேரணி மக்கள் தலைவர்களைச் சந்திக்கும் ஒரு நிகழ்வு என்று கூறப்பட்டிருந்தாலும் அதில் கலந்துகொள்ள  சுமார் 500 குடியிருப்பாளர்களும் ஆதரவாளர்களும் டிபிகேஎல் நுழைவாயிலில் திரண்டனர். சொத்துவரியை 300 விழுக்காடு உயர்த்தும் முடிவு கைவிடப்பட வேண்டும் என்றும்  அவர்கள் உரக்க  முழக்கமிட்டனர்.

கூட்டரசு பிரதேசத்தின் பக்காத்தான் எம்பிகள் அனவருமே அங்கிருந்தனர்.

ஆட்சேபணைக் கடிதங்களை டிபிகேஎல் அதிகாரிகள் பெற்றுக்கொண்டதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்தார்..