அரசாங்கம்: விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை

1 hargaபல ஆண்டுகளாக பற்றாக்குறை நிலையிலேயே காலத்தை ஓட்டியாயிற்று. அந்நிலையைத் தொடர விடுவது நல்லதல்ல. அதனால் உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

புத்ரா ஜெயாவில், பொருளாதார உருமாற்றத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் இவ்வாறு கூறினார்.

“எதுவும் செய்யவில்லை என்றால், நாடு எதிர்காலத்தில் கடும் பிரச்னைகளை எதிர்நோக்கும்”, என்றாரவர்.