மலாய்க்காரர் பொருளாதார அவலத்துக்குக் காரணம் மலாய்க்கார்களே- தெங்கு ரசாலி

1 razaliநிறுவனத்துறையிலும் பொருளாதாரத் துறைகளிலும் மலாய்க்காரர் முன்னிலை குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், மலாய்க்காரர் உரிமை மறுக்கப்படுவது  இதற்குக் காரணம் அல்ல.

மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் 4ஆம் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய  தெங்கு ரசாலி ஹம்சா இவ்வாறு கூறினார்.

“மலாய்க்காரர்களிடம் போட்டியையும் சிக்கல்மிக்க வர்த்தகச் சூழலையும் எதிர்த்து நிற்கும் மன உறுதி இல்லை என்பதுதான் முக்கிய காரணமாகும்”.

மலாய்க்காரர் பற்றிய குறைகூறல்களைக் கேட்க விரும்பாத ஒரு கூட்டத்தில் இப்படி ஒரு கருத்தைப் பட்டென்று போட்டுடைத்திருக்கிறார் அந்த குவா மூசாங் எம்பி.

மலாய்க்கார்களிடம் கட்டொழுங்கை மேம்படுத்தி, போட்டிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலை வளர்த்து சரியான அணுகுமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்றாரவர்.

தொடர்ச்சியாக உதவிகளைப் பெற்றுவரும் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் தாங்கள் வெற்றிபெறாததற்கு மற்ற இனத்தவ்ரைக் குறை சொல்லக்கூடாது எனவும் ரசாலி குறிப்பிட்டார்.