டிசம்பர் 31 பேரணிக்குச் செல்லாதீர்: மாணவருக்கு யுஎம் எச்சரிக்கை

டிசம்பர் 31-இல் டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)  மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவ்வாறு கேட்டுக்கொள்வதாக யுஎம் மாணவர் விவகாரத் துறை கூறிற்று.

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அப்பேரணியை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என அத்துறை அதன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளது.

“அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை என்பதால் அது சட்டவிரோத பேரணி என அறிவிக்கப்பட்டுள்ளது”, என்று அது தெரிவித்தது.