பெர்காசா: பிஎன் வெற்றிக்காக அரசாங்கம் நிதிஉதவி செய்கிறது

logo perkasa 2அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி அளிக்கிறதாம். சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கார் யாஹ்யா இவ்வாறு கூறினார்.

இந்த நிதியுதவியைப் பகிரங்கப்படுத்திய பெல்டா தலைவர் இசா சமட்டை அவர் சாடியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

“கட்சி மூத்த தலைவர் என்ற முறையில் இதை அம்பலப்படுத்தி அரசாங்கத்தின் எதிரிகள் அதைக் குறைகூறும் நிலையை அவர் உருவாக்கி இருக்ககூடாது. தெரிந்தால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது”, என்றாவர்.