டிஏபி: மலேசியா அம்னோவின் சொத்தல்ல

kasthuriபிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று கூறிய குவாந்தான் அம்னோ மகளிர் தலைவி ஜைதோன் மாட்-டை பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு கடிந்து கொண்டார்.

“மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வது ஏன்?

“வியர்வைச் சிந்தி நாட்டைக் கட்டி வளர்த்தவர்களைப் பார்த்து நாட்டைவிட்டு வெளியேறு என்று சொல்லும் உரிமையை அம்னோ தலைவர்களுக்குக் கொடுத்தது யார்?”, என்றவர் வினவினார்.

ஜைதோன் அவ்வாறு கூறியதாக நேற்றைய த ஸ்டார் நாளேடு அறிவித்திருந்தது.

அவர்மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஸ்தூரி கேட்டுக்கொண்டார்.