பிஎஸ்எம்: பேரணி தேவையா என்பதை முடிவு செய்வது போலீசின் வேலை அன்று

rallyபோலீசின் வேலை பாதுகாப்பை நிலைநிறுத்துவதுதான். விலை உயர்வுகளுக்கு எதிராக மக்கள் பேரணி நடத்தலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதல்ல.

“மின்கட்டணம், நெடுஞ்சாலைக் கட்டணம் உள்பட பல்வேறு பொருள்களின் விலை உயர்வுகளுக்கு எதிராக பேரணி நடத்தும் மக்களின் உரிமையைத் தடுக்க போலீஸ் அறிக்கை விடுத்திருப்பது மக்களின் உரிமைகளில் தலையிடும் செயலாகும்.

“பொது அமைதியையும் பாதுகாப்பையும் காப்பதுதான் போலீசின் வேலை. டாட்டாரான் மெர்டேகாவில் மக்கள் பேரணி நடத்தலாமா கூடாதா என்று அரசியல் முடிவு செய்வது அவர்களின் வேலை அல்ல”, என பார்டி சோசியலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர்  எஸ்.அருள்செல்வன் கூறினார்.