ஜயிஸ், பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை: மலாய்மொழி பைபிள்கள் பறிமுதல்

bibleசிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலேசிய பைபிள் கழகத்தில்(பிஎஸ்எம்) அதிரடிச் சோதனை நடத்தி அங்கிருந்த  மலாய்மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது.

மலேசியாகினி, பிஎஸ்எம் தலைவர் லீ முன் சூனைத் தொடர்புகொண்டு பேசியபோது இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள்  16 பெட்டிகளில் இருந்த 321 பைபிள் பிரதிகளை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

10 இபான் மொழி பைபிள்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.

பிற்பகல் 1 மணிக்கு வந்த ஜயிஸ் அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர் எனவும் கட்டிடத்தின் முன்வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர் எனவும் லீ சொன்னார்.