ஆயர்: ஜயிஸ் ஜெஸ்டாபோ போன்று நடந்துகொள்கிறது

bishopகத்தோலிக்க ஆயர்  டாக்டர் பால் டான் சீ இங், நேற்று  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) அதிகாரிகள்  மலேசிய பைபிள் கழகத்தில் நடத்திய அதிரடிச் சோதனையை,  “கிறிஸ்துவர்களின் சமய உரிமையில் அதிகாரிகளின் அத்துமீறிய தலையீடு அதிகரித்து வருவதைக் காண்பிக்கும்  மற்றுமொரு அத்தியாயம்” என வருணித்தார்.

“இந்தக் கிறுக்குத்தனத்தை ஒருவரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். அவர்தான் பிரதமர்”, என மலாக்கா-ஜோகூர் மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபை தலைவர் கூறினார்.

ஆனால், அவருக்கும் துணிச்சல் இல்லை. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக இறங்குமுகமாக உள்ள முஸ்லிம்-கிறிஸ்துவர் உறவு மேலும் மோசமடையலாம் என்று  கவலைப்படுவதாக  அவர்  குறிப்பிட்டார்.