த ஹெரால்ட் ஆசிரியரின் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம்

andrewகிள்ளானில் ஒரு தேவாலயத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முஸ்லிம் தரப்புகள் மிரட்டியுள்ள  வேளையில் த ஹெரால்ட் என்னும் கத்தோலிக்க வார இதழின் ஆசிரியர் லாரன்ஸ் அண்ட்ருவின் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.

இன்று  காலை, போலீஸ் சிறப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்   கிள்ளான்  மாவட்ட போலீஸ் தலைமையகத்துத் தம்மை வரச் சொன்னதாக பாதர் அண்ட்ரு லாரன்ஸ் கூறினார்.

“அங்கு மூன்று அதிகாரிகள் இருந்தனர்…..சுமார் 30 நிமிடம் உரையாடினோம். அப்போது என் பாதுகாப்புக்கு அவர்கள் உத்தரவாதம் அளித்தனர்”, என்றாரவர்.