தேவாலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கும் துணைப் பிரதமரை நஜிப் கண்டிக்க வேண்டும்

1-teraseதேவாலயங்களுக்குமுன்  ஆர்ப்பாட்டம் செய்யும் அம்னோவின் திட்டத்துக்குத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆதரவு தெரிவித்திருப்பதை பிரதமர் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும்.

“பிரதமர் என்ற முறையில் நஜிப்  அப்துல் ரசாக்,  நாட்டில் இன, சமய  இணக்கநிலையை  உறுதிப்படுத்த  வேண்டும்”,  என டிஏபி  தேசிய  உதவித் தலைவர்  தெரெசா  கொக் இன்று ஓர் அறிக்கையில்  குறிப்பிட்டார்.

சிலாங்கூர் தேவாலயங்கள்முன், குறிப்பாக  கிள்ளானில்,   ஆர்ப்பாட்டம்  செய்யும்  மாநில  அம்னோவின்  திட்டம்  குறித்து  பிரதமர்  மவுனம்  சாதிப்பது  பற்றிக் கருத்துரைத்தபோது  அவர் இவ்வாறு கூறினார்.

“தேவாலயங்கள்முன்  ஆர்ப்பாட்டம்  செய்யும்  சிலாங்கூர்  அம்னோவின்  திட்டத்தை ஆதரிக்கும் துணைப்  பிரதமரையும்  அவர்  கண்டிக்க  வேண்டும்.

“துணைப்  பிரதமரான  முகைதின்  எப்படி  இவ்வளவு பொறுப்பற்றவராக  இருக்கிறார்?”, எனவும் சிபூத்தே  எம்பி வினவினார்.