பிஎஸ்எம் தலைவர்: முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்தோம் என்பதற்கு ஆதாரமில்லை

1 bsm chiefமலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்), முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்கிறது  என்பதற்கு  எந்த  ஆதாரமும்  இல்லை என்பதால் அதனிடமிருந்து  கைப்பற்றப்பட்ட  பைபிள்களை மாநில  அரசு  திருப்பிக் கொடுக்க  வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

1985-இலிருந்து  பைபிள்களை  விநியோக்கும்  ஒரு மையமாகத்தான் பிஎஸ்எம்  செயல்பட்டு  வருகிறது என  அதன் தலைவர்  லீ மின் சூன் தெரிவித்தார்.

“பைபிள்களை வாங்கி தேவாலயங்களுக்கு  விநியோகம்  செய்கிறோம். எல்லா  மொழி பைபிள்களும் பைபிள்  கழகத்தில் உள்ளன. நாங்கள் மதப் பிரச்சாரம் செய்வது இல்லை. கிறிஸ்துவர்களுக்கும் தேவாலயங்களுக்கும்  பைபிள்கள் விநியோகம்  செய்வது  மட்டும்தான் எங்கள்  வேலை”, என்றாரவர்.

சமய சுதந்திரத்தின்  பொருட்டு  கைப்பற்றப்பட்ட  பைபிள்கள்  திருப்பிக்  கொடுக்கப்பட  வேண்டும். அத்துடன்  முஸ்லிம்-அல்லாதார்மீது  நடவடிக்கை  எடுக்கும் அதிகாரம் ஜயிஸுக்கு உண்டா என்பதும் விளக்கப்பட  வேண்டும் எனவும் லீ  கேட்டுக்கொண்டார்.