அனைத்துசமயக் குழு: ஜயிஸின் அதிரடிச் சோதனை வருந்தத் தக்கது

1 al kitabமலேசிய  பைபிள் கழகத்தில்  மேற்கொள்ளப்பட்ட  அதிரடிச்  சோதனையை  எண்ணி வருந்துவதாக  மலேசிய அனைத்துசமய  மன்றம்  கூறியது.

ஜனவரி  2-இல், சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்) அங்கு  அதிரடிச் சோதனை  மேற்கொண்டு    மலாய்மொழி  பைபிள்கள் பலவற்றைக் கைப்பற்றிய  சம்பவம் “சட்ட  விரோதமானது”  என  மலேசிய  பெளத்தம், கிறிஸ்துவ, இந்து,  சீக்கிய, தாவோயிச சமயங்களின் கூட்டு ஆலோசனை மன்றம் கூறியது. 

எந்தவொரு சமய  அமைப்புக்கும்  மற்றொரு  சமயத்தைக்  கட்டுப்படுத்தும் உரிமை  கிடையாது  என்று  கூறிய  அமமன்றம், ஜயிஸ்  அதிகாரத்தைமீறி  நடந்துகொள்ளக் கூடாது  என்று வலியுறுத்தியது.