பாவ வரி தொடர்பில் டிஏபி-இன் பரிந்துரைக்கு பெர்காசா ஆதரவு

1 ibrahimஅடிக்கடி  முட்டி  மோதிக்கொள்வதையே  வழக்கமாகக் கொண்ட டிஏபியும்  மலாய்க்காரர்  உரிமைகளுக்காக  போராடும் என்ஜிஓ-வான பெர்காசாவும்  பாவ  வரிகளைப்  பொறுத்தவரை  ஒத்த  சிந்தனையைக்  கொண்டிருப்பதாக  தெரிகிறது.

பாவ  வரிகள்  மூலம்  கிடைக்கும்  வருமானத்தை  அரசாங்கம்  தொகுநிதிக் கணக்கில்  சேர்க்காமல்  தனியாக  வைக்க  வேண்டும்  என்று  டிஏபி-இன்  சிரம்பான்  எம்பி   அந்தோனி லொக்  முன்வைத்த பரிந்துரையை  பெர்காசா தலைவர்  இப்ராகிம் அலி  வரவேற்றார்.

“அதனுடன்  உடன்படுகிறேன்.  இதைத்தான் நானும் நீண்டகாலமாக  சொல்லி  வந்திருக்கிறேன். இப்பரிந்துரைக்கு  எல்லா முஸ்லிம்களும்  ஆதரவு  தெரிவிப்பர்”, என்றாரவர்.