பெர்சே: பிரச்னைகளுக்குப் பேரணிகளே தீர்வாகிடமாட்டா

bersihபெர்சே  என்றதும் அது நடத்திய  மிகப்  பெரிய  பேரணிகள்தான்  சட்டென்று  நினைவுக்கு  வரும்.  ஆனால், பேரணிகள்  நடத்தியே  எல்லாப்  பிரச்னைகளுக்கும்  தீர்வு  காண  முடியாது  என்கிறார்  அக்கூட்டமைப்பின்  புதிய  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா.

வரும்  ஆண்டுகளில், தேர்தல் தொகுதி  எல்லைகளைத்  திருத்தி  அமைக்கும் தேர்தல் ஆணையத்தின்  நடவடிக்கையை நுணுகி  ஆராய்வதும்  வாக்காளர்களுக்கு  விழிப்புணர்வை  ஏற்படுத்தும்  இயக்கம்  நடத்துவதுமே தேர்தல்  சிரமைப்புக்காகப் போராடும் அவ்வமைப்பின்  முக்கிய  குறிக்கோளாக  இருக்கும்  என்றாரவர்.

மரியா, கடந்த  ஆண்டு  நவம்பர் 3-இல், அம்பிகா ஸ்ரீநிவாசன்,  ஏ. சமட்  சைட்  அகியோரிடலிருந்து  பெர்சே  தலைமைப்  பொறுப்பை  ஏற்றார்.