‘மலாக்கா சுல்தான்’ விருதுகள் வழங்க திட்டமாம்

malacca‘மலாக்கா சுல்தான்’ எனத்  தம்மைச்  சுயமாக  பிரகடனம்  செய்து  கொண்டிருக்கும் ராஜா நூர் ஜான் ஷா  ராஜா  துவா, மலாக்காவுக்கு  அருகில்  பூலாவ்  புசாரில்,    ‘அரச’ விருதுகளையும்  பட்டங்களையும்  பதக்கங்களையும்  வழங்கும்  சடங்கு  ஒன்றை  நடத்த  திட்டமிடப்பட்டிருப்பதற்கு  எதிராக  இரண்டு  போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டுள்ளன.

ஆயர்  கெரோ போலீஸ்  நிலையத்தில்  அது பற்றி   புகார்  செய்த பூலாவ் புசார்  பாதுகாப்புக்  குழுத்  தலைவர்  அப்துல்  கப்பார்  அடான், அவ்வாறு  செய்வது  மாநில  அரசமைப்புக்கு  முரணானது என்றும் அதற்கு  எதிராக  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்றும்   கேட்டுக்கொண்டார்.

“மாநில  ஆளுநர்  மட்டுமே அரச விருதுகளையும்  பட்டங்களையும்  வழங்க  முடியும். இதை  யாரும்  கேலிக்கூத்தாக்க  வேண்டாம்”, என்றாரவர். 

அண்மையில்,  ராஜா  நூர்  ஜான்  ஷா, தம்மை மலாக்கா  சுல்தானாக, அங்கீகரிக்க  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  முதலமைச்சர்  இட்ரிஸ்  ஹருனுக்கு  ஒரு  கடிதம்  எழுதி இருந்தார்.  அனைத்துலக  நீதிமன்றம்  அந்த அங்கீகாரத்தை  வழங்கி  இருப்பதாகவும்  அவர்  கூறிக்கொண்டார்.