பிரதமர் நஜிப்பின் கங்கோங் கீரை கூற்றை கேலி செய்து மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் நடத்திய ஆர்ப்பாட்டம் அம்னோ உறுப்பினர்களுக்கு சினம் மூட்டியதால், அவர்கள் செபெராங் ஜெயாவில் லீயின் பண்பற்ற நடத்தைக்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்னோ மாநில தலைவர்கள் உட்பட சுமார் 600 பேர் சன்வே கார்னிவல் மாலின்முன் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக, ஒரு கூட்டத்தினர்” அல்லாஹூ அக்பர்” மற்றும் “ஹிடுப் மெலாயு” என்று கத்திக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
“பிஎம்மை (பிரதமரை) அவமதிப்பது மலாய்க்காரர்களை அவமதிப்பதாகும்”, “பினாங்கு மலாய்க்காரர்கள் கங்கோங் கீரையை சாப்பிட்டு வாழ்கின்றனர்”, “ABCD – Asal Bukan Cina” மற்றும் டிஎபி இஸ்லாத்தின் எதிரி” என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்டிருந்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இவற்றில் கவனத்தை ஈர்த்தது இரத்த சிவப்பு நிறத்திலான பதாகையாகும். அதில் “டிஎபி தலைவர்களின் வாயின் காரணமாக மே 13, 1969 நடந்தது … இன்னும் வேண்டுமா?” என்று எழுதப்பட்டிருந்தது.
அக்கூட்டத்தில் பேசியவர்களில் கெபலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸால் மரைக்கான், மாநில அம்னோ செயலாளரும் புக்கிட் மெர்தாஜாம் தலைவருமான மூசா ஷீக் ஃபாட்சிர், மாநில அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் ராபிஸால் ரஹிம் மற்றும் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் ஷீக் ஹுசேன் மைடின் ஆகியோர் அடங்குவர்.
கெடா மாநில கித்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஸாமில் இப்ராகிம் மற்றும் மாநில பெர்காசா இளைஞர் பிரிவு தலைவர் ரிட்சுவான் அஸுடின் ஆகியோரும் அங்கு இருந்தனர். ஆனால், அவர்கள் கூட்டத்தில் பேசவில்லை.
முதல் தவணை சட்டமன்ற உறுப்பினரான லீக்கு பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டாம் என்று ரீஸால் டிஎபி தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
“பிரதமர் செய்த தவறு என்ன? நாங்கள் மாநில அரசாக இல்லாதிருந்த போதிலும் அவர் பினாங்கிற்கு வந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்”, என்று ரீஸால் மேலும் கூறினார்.
“கங்கோங் இப்போது ஒரு பிரச்சனையாகியுள்ளது. அவர்கள் செய்வதற்கு வேறொன்றும் இல்லாதது போல் இருக்கிறது:, என்று ஜமில் கூறினார்.
“பிரதமரின் பேச்சை புரிந்து கொள்ளாத அளவிற்கு அவர்கள் (பக்கத்தான் தலைவர்கள்) அவ்வளவு முட்டாள்களா?” என்று அவர் வினவினார்.


























இந்த வாசகம் கடுமையானது எப்படி இவர்கள் வுபயொகிக்க போலிஸ் அனுமதி கொடுத்தது.மே 13 சீனர் மட்டும் படுகொலை செய்யபடவில்லை மற்றும் அப்பாவி தமிழர்களும் கொல்லபட்டனர்.என்ன துணிவிருந்தால் இந்த சம்பவத்தை பயமில்லாமல் பொதுவில் ஞாபக படுத்துகின்றனர்.போலிஸ் என்ன செய்கின்றது.பிரதமர் இதற்கு வுடந்தயொ
ஐயா IGP அவர்களே இவர்களும் போலிசுக்கு முன் அறிவிப்பு செய்து விட்டுதான் போராட்டம் செய்தார்களா? இவ்வாறு அவதூறாகவும், இனக் கலவரத்தை தூண்டும் தீய நோக்கத்துடன் பேசிய பேச்சுக்கு உமது தேசிய நிந்தனை சட்டம் பாயாதோ? உம்மவர்க்கு ஒரு சட்டம், எம்மவர்க்கு ஒரு சட்டமோ? என்னே உங்களது செயலாக்கம்!
எவ்வளவு நாளுக்குத்தான் பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாற்றுவீர்.மீண்டும் mei 13 வந்தால் உலக நாடுகள் சும்மா தான் இருக்குமா?சீனா விடமாட்டான் உங்களை.
காவல் துறை அம்னோவின் குண்டர் கைகூலிகள் –அப்படி இருக்கையில் எப்படி தராதரமில்லா அம்னோ இன வாதிகளின் மேல் நடவடிக்கை எடுப்பான்கள்? அறிவிலிகள் மலிந்த நாடாகிவிட்டது.
சீனனுக்கு சீனா வருவான் நமக்கு ஒன்னுனா இந்தியா வருமா?????
நம்மவர்களில் பலருக்கு மே 13 1969 நடந்ததே தெரியாமல் இருக்கையில் என்னத்தை இவர்களிடம் இருந்து எதிர் பார்க்க முடியும்?
அம்னொக் காரர்களின் அறிவு வளர்ச்சி அவர்கள் செய்யும் செயலில் இருந்து பல எடுத்துக் காட்டுகளை முன் வைக்கலாம்,டத்தோ அம்பிகா தேர்தல் சீர்திருத்தம் கோரினார் ,அவர் வீட்டுமுன் குதம் காட்டும் பயிற்சி செய்து தங்களின் அறிவு வளர்ச்சியின் சுழியத்தை நிருபித்தார்கள்,தோழமை கட்சி துணை கல்வியமைச்சர் கமலநாதனின் முகத்தில் குத்து விட்டு நாட்டு வரலாற்றில் புதிய சாதனை ஏற்ப்படுத்தியது அறிவு வளர்ச்சியின்,உச்சமில்லையா ?விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் குரல் குடுத்தால் நாட்டின் பிரதமர் நஜிப்பு கங் கொங்க கீரையை சாப்பிட்டு முடக்கு வாதம் வந்து முடங்கி கிடக்க சொல்லி கிண்டல் செயிகிறார்!கங் கொங் கிரியை பிரதமரை சாப்பிட சொன்னால் MAY 13 வேணுமா என்று கெட்கும் அம்னோ ஜீவிகள் ! அம்னோ அறிவாளிககுக்கு போலீசை கேட்காமலேயே அனுமதியை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதி எப்போதும் உண்டு !சட்டம் தடுக்காது !
நமக்கு இந்தியா உதவாது .அது தெரிஞ்ச விஷயம்.அதைதான் ஈழ விசயத்தில் கண்டோமே.குறைந்த பட்சம் சீனனுக்கு சீனா உதவ வரும்.
அதில் பங்கு பெற்ற முக்கியமானவர்களில் பெரும்பாலும் மரைக்காயர்கள். மே 13 வந்தால் தமிழ் நாட்டுக்கு ஓடி விடலாம் என்று தயார் நிலையில் இருப்பவர்கள். ஆகப்போவது ஒன்றுமில்லை. காவல்துறையை வைத்துக்கொண்டு ஆட்சிபுரிவோர் அச்சுறுத்துகின்றனர்!
மலாய்காரர்களில் அனைவருமே கெட்டவர்கள் / தீய மனம்
கொண்டவர்கள் இல்லை !
சில அரசியல் ஓநாய்கள் நாட்டையும் இன ஒருமைப்பாட்டையும்
கெடுத்துக்கொண்டிருக்கின்றன .
இவற்றை சரி செய்ய வேண்டிய தலைமை கேள்விக்குறியாக
இருப்பதே ……., ??????
என்னடா may 13 பூச்சாண்டி வித்தையா? நாங்க உங்க மோகர கட்டைக்கு may 15 வே கொடுக்குறோம் எடுத்துக்கோ!!!
ந.சந்திரன்! நீங்கள் கூறும் அந்த நல்ல மலாயக்காரனுங்க மற்றவர்களுக்கு அம்னோ தீங்கு செய்யும் பொது ஏன் ஒன்று கூடி எதிர்க்கவில்லை? ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் சரியாக கிடைக்கிறது அப்படிதானே???