பிஎன்னை அதன் போக்கில் செயல்பட விடுவது மலேசியாவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்

ong-tee-keatபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  நாட்டைப்  பிளவுபடுத்தும் விவகாரங்கள்  பெருகிவருவதைக்  கவனிக்காது  இருந்தால் மலேசியா  சின்னாப் பின்னமாகிவிடும்  என  முன்னாள்- எம்சிஏ  தலைவர்  ஒங்  தி  கியாட்  எச்சரித்துள்ளார்.
“வாதங்கள்-எதிர்வாதங்களும்,  வெறுப்புணர்வும்,  மிரட்டல்களும்  கட்டுமீறிச்  செல்வதைப்  பார்த்து  என்னைப்  போன்ற  பொதுமக்கள்  கவலை  கொள்கிறோம்”, என  ஓங்  அவரது  முகநூல்  பக்கத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

“மெல்லிய  சமய  நல்லிணக்கம்  சிதறிச் சின்னாப்  பின்னம்  ஆகுமுன்   பிஎன்  தலவருமான பிரதமர்  தலையிட்டுத்  தடுக்க  வேண்டும்”,  என்றவர்  கேட்டுக்கொண்டார்.