‘அல்லாஹ்’தொடர்பில் அரச ஆணையைச் சிறுமைப்படுத்தாதீர்: அமைச்சர் எச்சரிக்கை

1-shafie‘அல்லாஹ்’ என்னும்  சொல்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே உரியது  என்ற  அரச  ஆணையைக்  கேலி  செய்வோருக்கு  எதிராக  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனப்  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர் ஷாபி  அப்டால்  எச்சரித்துள்ளார்.

அதன்  தொடர்பில்  சினமூட்டும்  வகையில்  அறிக்கைகள்  விடுப்பது  இஸ்லாம்  மட்டுமே  கூட்டரசின்  அதிகாரப்பூர்வ  சமயம்  என்பதை  வலியுறுத்தும்  அரசமைப்பை  மீறும்  செயலாகக்  கருதப்படும்  என்றாரவர்.

கடந்த  வாரம் கெடா  சுல்தான்,  சுல்தான்  அப்துல்  ஹாலிம்  முவாட்’ஸாம்  ஷா,  ஓர்  அறிக்கையில்  ‘அல்லாஹ்’ என்னும்  சொல்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே  உரியது  என்று  குறிப்பிட்டிருந்தார்.  சுல்தான்,  நாட்டின்  பேரசசருமாவார்.