இசி: அவதூறு கூறும் பரப்புரைகளைத் தடுக்க நடப்பு விதிகளே போதுமானவை

azizபரப்புரைகள்  எப்படி  இருக்க  வேண்டும்  என்பதை  நடப்பு விதிகள்  தெளிவாகவே  எடுத்துரைக்கின்றன.  “செக்ஸ்  விவகாரங்களைச் சொல்லிக்  களங்கப்படுத்தும்” பரப்புரையில் அம்னோ  ஈடுபடுவதைத்  தடுக்க  அவை  போதுமானவை.

தேர்தலின்போது  கடைப்பிடிக்க  வேண்டிய  ஒழுக்கக்  கோட்பாடுகள்  பற்றி  அரசியல்  கட்சிகளுக்கு  மீண்டும்  மீண்டும்  தெரிவிக்கப்பட்டு  வந்திருப்பதாக  தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  அப்துல்  ஆசிஸ்  முகம்மட்  யூசுப்  கூறினார்.

அமலாக்கப்  பிரிவு ஒன்றும்  தேர்தல்  பரப்புரைகளை  அணுக்கமாகக்  கண்காணித்துவரும்  என்றாரவர். 

“இவை  எல்லாம்  அவர்களுக்கு (அரசியல்  கட்சிகளுக்கு)த்  தெரியும்.  மேலும்  சொல்ல  வேண்டிய  அவசியமில்லை  என்று  நினைக்கிறேன்”,  என  அப்துல்  அசீஸ்  மலேசியாகினிக்கு  அனுப்பிய  குறுஞ்செய்தியில்  குறிப்பிட்டிருந்தார்.  

புதன்கிழமை  வேட்புமனு  தாக்கல்  செய்யும்  நாளும்  வாக்களிக்கும்  நாளும்  அறிவிக்கப்படும்போது  இசி  இதன்  தொடர்பில்  மேலும்  விளக்கமான   அறிக்கையையும்  வெளியிடும்  என்றாரவர்.