சிலாங்கூரைப் பாதுகாக்க அன்வார் தேவை

nazmiசிலாங்கூரில்  கடந்த  சில  மாதங்களாக  பிஎன்  கடுமையான  அரசியல்  தாக்குதல்களை  நடத்தி  வருவதால்  அதைக்  காப்பதற்கு  பிகேஆர்  நடப்பில்  தலைவர் அன்வார்  இப்ராகிமின்  சேவை  மிகவும்  தேவைப்படுகிறது  என  சிலாங்கூர்  சட்டமன்றத்  துணைத்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  கூறினார்.

சிலாங்கூரின்  பொருளாதார  ஆலோசகராக  உள்ள  அன்வார்,  சட்டமன்ற  உறுப்பினரானால்  மாநில  விவகாரங்களில்  தம்மை  முறைப்படி  ஈடுபடுத்திக்கொள்ள  முடியும்.  எனவேதான், குறைகூறுவதை  விடுத்து  அவர்  காஜாங்  இடைத்  தேர்தலில்  போட்டியிட  நியாயமான  வாய்ப்பளிக்க  வேண்டும்  என  நிக்  நஸ்மி  கேட்டுக்கொண்டார்.

அன்வார், மந்திரி   புசார்  பதவியை  அப்துல்  காலிட்  இப்ராகிமிடமிருந்து  பறித்துக்கொள்வார்  என்று  கூறப்படுவதையும்  நிக்  நஸ்மி  மறுத்தார்.

“சிலாங்கூரில்  சவால்களைச்  சமாளிக்கவும்  புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும்  முயற்சிக்கு  வலுச்  சேர்க்கவும்  அவருடைய  பலம்,  அனுபவம்,  செல்வாக்கு  எங்களுக்குத்  தேவைப்படுகிறது”, என்றாரவர்.