ஓய்வு பெறப் போகிறாரா தயிப் முகம்மட்?

abdul taib33 ஆண்டுகளாக  சரவாக்  முதலமைச்சராக  இருந்துவரும்  அப்துல்  தயிப்  முகம்மட்  பதவி  விலகுவது  பற்றியும்  அரசியலிலிருந்து  ஓய்வு  பெறப்போவதையும்  வரும்  சனிக்கிழமை  பிபிபி  கட்சிக்  கூட்டத்தில்  அறிவிப்பார்  என  எதிர்பார்க்கப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை  பிஎன்  எம்பி- களுடனும்  சட்டமன்ற  உறுப்பினர்களுடனும்  சந்திப்பு  நடத்தியதை  அடுத்து  இம்முடிவு  எடுக்கப்பட்டது  எனப்  பெயர் குறிப்பிடப்படாத  சில  வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  பெரித்தா  ஹரியான்  அறிவித்துள்ளது. 

“எனக்கு  75 வயதாகிறது. இப்போது  இருப்பதுபோல்    ஐந்தாண்டுகளுக்குப்  பிறகும்  இருக்க  முடியாது.  அதனால்,  எதிர்வரும்  தேர்தலின்போது  பணி  ஓய்வு  பெற  விரும்புகிறேன்.  அதுவே,  என்  கடைசி  தேர்தலாக  இருக்கும்”, என்று  தயிப்  அச்சந்திப்பின்போது  கூறினாராம்.