காஜாங் தேர்தலால் இசியின் தொகுதிகள் திருத்தி அமைக்கும் வேலை தடைப்பட்டது

ecதேர்தல்  தேர்தல்  ஆணையம் (இசி)  தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணியில்  ஈடுபட்டிருக்கும்  வேளையில்  காஜாங்  இடைத்  தேர்தல்  நடப்பது  அதன்  பணிக்கு  இடையூறாக  அமைந்துள்ளது.

பிகேஆரின்  லீ  சின்  சே  ஜனவரி  27-இல்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து  விலகியது  எதிர்பாராத  ஒன்று  என்று  கூறிய  இசி  தலைவர்   அப்துல்  அசீஸ்  யூசுப்,  அதனால்  இசி-யின்  பணி  பாதிக்கப்பட்டிருப்பதாகக்  கூறினார். 

“தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணியில்  மேலும்  தாமதங்கள்  நிகழா  என்று  நம்புகிறோம்”,  என்றாரவர்.  

அப்படியானால்,  தொகுதிகளைக்  காலி  செய்யுமுன்னர்  அது  பற்றி  இசி-க்குத்  தெரிவிக்கப்பட  வேண்டும்  என்று  அவர்  எதிர்பார்க்கிறாரா  என  அவரிடம்  வினவப்பட்டது.  அதற்கு  அசீஸ்,  சட்டப்படி  அவ்வாறு  செய்ய   வேண்டிய  அவசியமில்லை  என்றார்.