அல்லாஹ்’ விவகாரம் தொடர்பில் செய்திகள் போடுவதை நிறுத்துமாறு ஹெரால்ட் கேட்டுக்கொள்ளப்பட்டது

heraldஅரசாங்கம்  ‘அல்லாஹ்’  என்னும்  சொல்லைப்  பயன்படுத்துவது  மீதான  நிதிமன்ற  வழக்கு  பற்றியும்  முஸ்லிம்-அல்லாதார்  அச்சொல்லைப்  பயன்படுத்துவதின்  தொடர்பில்  எழுந்துள்ள  சர்ச்சை  பற்றியும்  செய்திகள்  வெளியிடுவதை  நிறுத்திக்கொள்ளுமாறு  கத்தோலிக்க  வார  இதழான  த  ஹெரால்டைக்  “கேட்டுக்கொண்டிருக்கிறது”.

ஹெரால்ட்,  மற்ற  இடங்களில்  மலேசியாகினி   போன்ற  இணையச்  செய்தித்தளங்களில்  இடம்பெறும்  கட்டுரைகளைத்  தனது  இதழ்களில்  வெளியிடுவதையும்  நிறுத்திக்கொள்ள  வேண்டும். 

“பொதுப்  பாதுகாப்பையும்,   நல்லிணக்கத்தையும்”  கருதி  அவ்வாறு  செய்ய  வேண்டும்  என  உள்துறை  அமைச்சு  ஜனவரி  20-இல்  அனுப்பி  வைத்த  கடிதத்தில்   கேட்டுக்கொண்டிருக்கிறது.