அன்வார்: ஆர்டிஎம்-மை, டிவி 3-யை, உத்துசானைப் பார்ப்பதே இல்லையா?

1 anwகாஜாங்  இடைத்  தேர்தலுக்கு  தாம்,  முன்கூட்டியே  தேர்தல்  பரப்புரையைத்  தொடங்கி  விட்டதாகக்  கூறப்படுபடுவது  ஆதாரமற்ற  குற்றச்சாட்டு  என   பிகேஆரின்  வேட்பாளரான  அன்வார்  இப்ராகிம்  மறுத்துள்ளார். 

அன்வார் கடந்த  வாரம்  காஜாங்கில்  செராமா  நடத்தித்  தேர்தல்  பரப்புரையில்  ஈடுபட்டதாக  பிகேஆர்  விளம்பரப்  பிரிவின்  முன்னாள்  தலைவரும்  இப்போது  பெர்காசா  உறுப்பினருமான  ரஸ்லான்  காசிமும்  இன்னும்  சிலரும்  கூறி  இருந்தனர். 

பிஎன்தான்  அரசாங்கக்  கட்டுப்பாட்டில்  உள்ள   ஊடகங்களில்  தமக்கு  எதிராக  பரப்புரையைத்  தொடங்கி  இருப்பதாக    அன்வார்  கூறினார்.

“அவரிடம்  சொல்லி டிவி 3-இடம்,  எனக்கு  எதிராக  விஷத்தனமான பரப்புரை  தொடங்கப்பட்டுள்ளதா  என்று  கேட்கச்  சொல்லுங்கள்….. 

“ஒவ்வொரு  நாளும்  பல  ஹீரோக்கள்  வந்து (என்னைப்  பற்றி)  அள்ளி  விடுகிறார்கள்”,  என்று  அன்வார்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.