எல்எப்எல்: அரசியல் பழிவாங்கும் போக்கு திரும்பி வந்திருக்கிறது

1-lflடிஏபி  தலைவர்  கர்பால்  சிங்  அரச  நிந்தனைக்  குற்றம்  புரிந்தார்  என்று  தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது,  யதேச்சாதிகாரமும்  அரசியல்  பழிவாங்கும்  போக்கும்  மீண்டும்  தலைதூக்கி  இருப்பதை உறுதிப்படுத்துகிறது  என உரிமைகளுக்காக  போராடும்  வழக்குரைஞர்கள் (எல்எப்எல்)  அமைப்பு  கூறியுள்ளது.

“எல்எப்எல் கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்  தீர்ப்பைக்  கேட்டு  அதிர்ச்சி  அடைகிறது. கர்பாலுக்கு ஐந்தாண்டுவரை  சிறைத்தண்டனை  விதிக்கப்படலாம்.  அதன்  விளைவாக  அவர்  நாடாளுமன்ற  உறுப்பினர்  பதவியையும்  இழக்கலாம்.

“அரசியல் ரீதியிலோ  விமர்சனமாகவோ  கருத்துரைப்பது  ஒரு  குற்றமல்ல. கர்பாலும்  அப்படித்தான். 2008  பேராக்  அரசமைப்பு   நெருக்கடியின்போது  சட்டக் கருத்து ஒன்றைத்  தெரிவித்தார். அதை  எந்தச்  சூழலிலும்  அரச  நிந்தனை  என்று  வருணிப்பது  சரியல்ல”, என எல்எப்எல்-இன்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

கர்பால்  அரசியல்  நிந்தனை புரிந்தார்  என்ற  தீர்ப்பும்  அதற்குமுன்  இண்ட்ராப்  தலைவர்  பி.உதயகுமாரின்  மேல்முறையீடு  தள்ளுபடி  செய்யப்பட்டதும் யதேச்சாதிகாரமும்  அரசியல்  பழிவாங்கும்  போக்கும்  திரும்பி  வந்திருப்பதைத்தான்  நிரூபிக்கின்றன  என்று  எல்எப்எல்  கூறியது.