அன்வாருக்கு ரிம800,000 இழப்பீடு கொடுக்குமாறு பாபாகோமோ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு

papaகோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம், வான்  முகம்மட்  அஸ்ரி  வான்  டெரிஸ்தான்  பாபாகோமோ  என்பதும்  அவர்  தீய  நோக்குடன்  அன்வார்  இப்ராகிம்மீது  அவதூறு கூறி  வந்தார்  என்பதும்  நிரூபிக்கப்பட்டிருப்பதாக  தீர்ப்பளித்தது. .

தீர்ப்பை  வழங்கிய நீதித்துறை  ஆணையர்  ரோலிலா  யோப், அவதூறு  செய்த  வான்  முகம்மட்  அஸ்ரி ரிம800,000  இழப்பீடு  வழங்க  வேண்டும்  எனவும்  உத்தரவிட்டார்.

“செலவுத்  தொகையாக  ரிம50,000  கொடுக்குமாறும்  நீதிமன்றம்  வான்  முகம்மட்  அஸ்ரிக்கு  உத்தரவிட்டது”, என  அன்வாரின்  வழக்குரைஞர்  என். சுரேந்திரன்  கூறினார்.   

தீர்ப்புக்கு  எதிராக  மேல்முறையீடு  செய்யப்போவதாக  வான்  முகம்மட்  அஸ்ரி-இன்  வழக்குரைஞர்  ஜஸ்பீர்  சிங்  கவுரா  கூறினார்.