நாட்டின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான ப. சந்திரகாந்தம் அவர்களின் மறைவிற்குச் செம்பருத்தியின் ஆழ்ந்த இரங்கல்…

PA-Chandragantham-214x300நாட்டின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான ப. சந்திரகாந்தம் நேற்று காலமானார். ஆளப்பிறந்த மருது மைந்தன், அமுதசுரபிகள், 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள், சாதனைப் படிகளில் சாமிவேலு போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை இவர் எழுதியுள்ளார்.  பத்திரிகையாளர், ஊடகவியலாளர்,  எழுத்தாளர்  என குறைந்தது ஐம்பது ஆண்டுகாலம் ஊடகத்துறையில் இருந்து எண்ணற்ற சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர்கள், சினிமா கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தனது இறுதி மூச்சு வரை தமிழ் நேசனின் ஞாயிறு பதிப்பாசிரியராக பணிப்புரிந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் செம்பருத்தியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிரித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறோம்.