தண்ணீர் கட்டணம் உயராது: காலிட்

khalidசிலாங்கூரில்  நீர்விநியோகத்  தொழில்  திருத்தி  அமைக்கப்படுவதால்  தண்ணீர் கட்டணம்  உயரலாம்  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  விடுத்துள்ள  எச்சரிக்கையை சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  தள்ளுபடி  செய்தார்.

ரபிஸியின்  எச்சரிக்கை  பற்றி  செய்தியாளர்கள்  வின்வியதற்கு  சுருக்கமாக  “இல்லை”  என்றவர்  பதிலளித்தார்.

நீர்  விநியோக  ஒப்பந்தத்தில்  கையொப்பமிட்ட  தலைவர்கள்  மூன்று  ஆண்டுகளுக்கு  தண்ணீர்  கட்டணம் உயராது  என்பதை  ஏற்கனவே  அறிவித்திருப்பதாக  அவர்  குறிப்பிட்டார்.  இது  பற்றிய  மேல்விவரங்கள்  பிறகு  தெரிவிக்கப்படும்.