அன்வார் குற்றவாளி என முடிவானால் காஜாங்கில் போட்டியிட முடியாமல் போகலாம்

pkr-mpஇரண்டாவது  குதப்புணர்ச்சி  வழக்கில்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்   இப்ராகிம்  விடுவிக்கப்பட்டதற்கு  எதிரான  மேல்முறையீட்டில்  அரசுதரப்பு  வெற்றிபெற்றால் அன்வார்  காஜாங்  இடைத்  தேர்தலில்  போட்டியிட  முடியாமல்  போகும்  சாத்தியம்  அதிகம்  இருப்பதாகக்  கூறுகிறார் பாயான்  பாரு  பிகேஆர்  எம்பியான  சிம்  ட்ஸே  ட்ஸின்.

முறையீட்டு  நீதிமன்றம்  இன்றும்  நாளையும்  அவ்வழக்கை  விசாரிக்கிறது.

“வெள்ளிக்கிழமை  விசாரணை  முடிந்ததும்  தீர்ப்பு  திங்கள்கிழமை  பிற்பகலில்  வழங்கப்படலாம்.

“அன்வார்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்,  தண்டனையை  நிறுத்திவைக்க  கூட்டரசு  நீதிமன்றத்துக்கு மனுச்  செய்வதற்கு  அவரின்  வழக்குரைஞர்களுக்குப்  போதுமான  கால அவகாசம்  இருக்காது.  அவர்  சிறை  வைக்கப்படுவார்”, என  சிம்  இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

அன்வார்  சிறைவிக்கப்பட்டால்  அடுத்த  நாள்,  மார்ச்  11-இல்,  காஜாங்  இடைத்  தேர்தலுக்கான  வேட்பாளராக   அவரை  நியமிக்க  முடியாமல்  போகும்  என்றவர்  விளக்கினார்.

“இது  எங்கள்  காஜாங்  திட்டத்தை  முறியடிக்கும்  பிஎன்னின்  அரசியல்  சதி……மக்கள்  இதை  உணர  வேண்டும்”,  என்றவர்  எச்சரித்தார்.