பெற்றோர் சீபோர்ட் பள்ளி விவகாரத்தை காஜாங் கொண்டுசெல்வர்

kannaகூட்டரசு  அரசாங்கமும்  சிலாங்கூர்  அரசும்  எதுவும்   செய்யாமலிருப்பதால்  அதிருப்தி  அடைந்துள்ள  சீபோர்ட்  பள்ளியைக்  காப்போம்  அமைப்பு  அவ்விவகாரத்தை  காஜாங்  இடைத் தேர்தலுக்குக்  கொண்டுசெல்ல  தீர்மானித்துள்ளது.

இடைத்  தேர்தலுக்கான  பரப்புரை  நடக்கும்  காலத்தில்   காஜாங்  வேட்பாளரான  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமிடம் இடமாற்றம்  செய்யப்பட்ட  அப்பள்ளி  தொடர்பில் ஒரு  மகஜர்  கொடுப்பதென  மலேசிய  தமிழ்ப்  பள்ளி  வாரியம்  கடந்த  வாரம்  முடிவு  செய்ததாக அதன்   தலைவர்  ஆர்.கண்ணன்   கூறினார்.

“(அப்பள்ளி  மாணவர்களின்)  குடும்பத்தார் அன்வாரிடம்,  அவர்  மந்திரி  புசார்  ஆவார்  என்று  கூறப்படுவதால்,   மகஜர்  கொடுக்க  எண்ணியுள்ளனர்”,  என்றாரவர்.

அதேபோல்  காஜாங்கில்  போட்டியிடும்  மசீச  வேட்பாளர்  சியு மெய்  பான் -னிடமும்  ஒரு  மகஜர்  கொடுக்கப்படும்.