எம்ஏஎஸ் விமானம், 239 பேருடன், காணாமல் போனது

masபெய்ஜிங்  நோக்கிப்  பறந்து  கொண்டிருந்த  மலேசிய  விமான  நிறுவனத்தின் (எம்ஏஎஸ்)  விமானமொன்று  காணாமல் போனது.

இரவு  12.41-க்குக்  கோலாலும்பூரிலிருந்து  புறப்பட்டுச்  சென்ற  அவ்விமானத்துடன்  பின்னிரவு  2.40-க்குப்  பிறகு  தொடர்புகொள்ள  முடியவில்லை  என  அவ்விமான  நிறுவனம்  அறிக்கை  ஒன்றில்  கூறியது.

B777-200 ரக  விமானமான  அதில்,  இரு  குழந்தைகள்  உள்பட  227 பயணிகளும்  12 பணியாளர்களும்  இருந்தனர்.

கோலாலும்பூரிலிருந்து  புறப்பட்ட  2 மணி  நேரத்துக்குப்  பின்னர்  அவ்விமானம்  காணாமல்   போனதாக  பிபிசி  கூறியது. சீனாவின்  ஸின்ஹுவா  செய்தி  நிறுவனம்  வியட்நாமுக்கு  உயரே  பறந்துகொண்டிருந்தபோதுதான்  அது காணாமல்  போயிற்று  எனத்  தெரிவித்தது.