ஒலிப்பதிவுக் கருவி கிடைத்தால்கூட உண்மையைக் கண்டறிவது சுலபமாக இராது

planeகொந்தளிக்கும்  இந்தியப்  பெருங்கடலிலிருந்து  விமானி அறையின்  ஒலிப்பதிவுக்  கருவியைத்  தேடி  எடுத்தாலும்கூட  எம்எச்370  விமானத்தைச்  சூழ்ந்துள்ள  மர்ம  முடிச்சை  அவிழ்க்க  முடியுமா  என்பது  சந்தேகமே.

ஒலிப்பதிவுக்  கருவி  இரண்டு  மணி  நேரப்  பேச்சை  மட்டுமே  வைத்திருக்கும். முந்திய  ஒலிப்பதிவுகளை  அழித்துவிட்டு  புதியதை  அது  ஒலிப்பதிவு  செய்யும்..  தாய்லாந்து குடாக்  கடலுக்கு  உயரே  பேசப்பட்டது,  ரேடார்  கருவியிலிருந்து  மறையுமுன்னர்  நடைபெற்ற  உரையாடல்கள்  எல்லாம்  அதில்  இருக்காது, அதனால்,  அப்போது  என்ன  நடந்தது  என்பதை  அறிய  முடியாமலே  போய்விடலாம்  என  விமானப்  போக்குவரத்து  வல்லுனர்கள்  கருதுகின்றனர்.

விமானம்  எதற்காக  பயணப் பாதையை  விட்டுத்  திரும்பியது  என்பதை  அறிய  இந்த  ஒலிப்பதிவுக்  கருவி  உதவும்  எனக்  கருதப்படுகிறது.