6.48 மில்லியன் பேர் ரிம3.37 பில்லியன் பிரிம் உதவித் தொகை பெற்றனர்

brimஇவ்வாண்டில் 6.48 மில்லியன்  பேர்  1மலேசிய  மக்கள்  உதவித் திட்டத்தைப்  பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு  மொத்தம் ரிம3.37 மில்லியன்  வழங்கப்பட்டதாக  இரண்டாவது  நிதி  அமைச்சர் அஹமட்  ஹுஸ்னி  கூறினார்.

அந்த  உதவித்  தொகையைப்  பெறத்  தவறியவர்கள் ஏப்ரல் 1  தொடங்கி  அதற்கு முறையீடு  செய்யலாம். அதற்கான  விண்ணப்பப்  பாரங்கள்  வருமான  வரி  அலுவகங்களில் (ஐஆர்பி) கிடைக்கும். அந்தப்  பாரங்களையும்  தேவையான  ஆவணங்களையும்  அவர்கள்  ஏப்ரல்  30-க்குள் ஐஆர்பி  அலுவலகங்களுக்கு  அனுப்பி  வைக்க  வேண்டும்.