பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மார்ச் 24-இல், எம்எச்370-இன் பயணம் “இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் முடிவுற்றது” என்று கூறியதன் அர்த்தம் என்னவென்று அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நஜிப் அப்படி அறிவித்ததும் பிறகு இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேனை அழைத்து விமானம் கடலில் விழுந்ததாக நஜிப் ஒருபோதும் சொல்லவில்லை எனக் கூற வைத்ததும் “தவறு” என்பது தெளிவு என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
மறுநாள், நாடாளுமன்றத்தில் காணாமல்போன விமானத்தில் சென்ற பயணிகளின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவிக்க சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தது ஏன் என்றும் அவர் வினவினார்.
தீர்மானத்தை முன்வைத்த நஜிப், இறந்துபோனவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனை நடத்துவது பற்றியும் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டதாகவும் லிம் சொன்னார்.


























முட்டாள் பிரதமர் !
அந்த முட்டாள் பயணம் BN பயணம் அதிலே ஒரு உதவாக்கரை கல்வி அமைச்சன் இவன்களின் பயணம் முடிந்ததை சொல்லியிருப்பான்
MH370 ன் பயணம் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் முடிந்தது என்று தான் சொன்னார் நம்பிரதமர்,நொறுங்கியது என்று அர்த்தமில்லை அந்தரத்தில் நிற்ப்பதாக அர்த்தம்,அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் விமானத்தை மீட்டெடுக்க நம் உலகமகா நடிகர் பெர்த்துக்கு பயணம் மேற்க்கொள்கிறார்,நம் பிரதமர் கூறுகின்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டால் அகராதிகளை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்!அர்த்தம் தெரியாமல் அனைத்து பத்திரிக்கைகளும் கருப்பு நிறத்தில் பிரசுரித்து பிரதமரை அவமானப் படுத்திவிட்டார்கள்!
முட்டாள் மாதிரி ஒன்றை சொல்வதைக் கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்….ஆனால், அதையும் சரி என்று ஒரு கூட்டம் சப்ப கட்டு கட்டுதே! அதை என்னவென்று சொல்வது.
அறிவாளிக் கூட்டத்திற்கு ஒரு சிறந்த அறிவாளிதான் தலைவராக இருக்க முடியும். அது போல் ஒரு முட்டாள் கூட்டத்திற்கு ஒரு சிறந்த முட்டாள் தானே தலைவராக இருக்க முடியும்.
“பயணம் முடிவுற்றது” என்பது பிரதமரின் அகராதியில், “விமான பயணத்திற்கு பணம் கட்டிய தூரத்திற்கு கொண்டு போய் இறக்கி விட்டோம்” என்று அர்த்தம். “எங்கே இறக்கி விட்டார்கள்” என்று கேட்காதீர்கள்!. அது அவர் பிரச்சனை அல்ல. பயணிகளின் பிரச்சனை!.