பிரதமர்: கடத்தல் நாடகம் உறவுகளைக் கெடுக்கும் முயற்சியாக இருக்கலாம்

kidnapநேற்றிரவு  சாபா,  செம்பூர்ணாவில் ஒரு  சீன  நாட்டவரும்  ஒரு பிலிப்பினோவும்  கடத்தப்பட்ட  சம்பவம்  சீனாவுக்கும்  மலேசியாவுக்குமிடையிலான  உறவுகளைக்  கெடுக்கும்  முயற்சியாக  இருக்கலாம்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கருதுகிறார்.

கடத்தலுக்குப்  பின்னே  அப்படி  ஒரு  நோக்கம்  இருப்பதை “மறுப்பதற்கில்லை”  என  ட்விட்டரில்  நஜிப்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.

முன்னதாக,  செய்தியாளர் கூட்டமொன்றில்  பேசிய  மசீச  தலைவர் லியோ  தியோங்  லாய்,   எம்எச்370  விமானத்தைத்  தேடும்  பணி  தொடரும்  வேளையில் நடைபெற்றுள்ள  கடத்தல்  சம்பவம்  மலேசியாவின்  நற்பெயருக்கு  மேலும்  களங்கத்தை  உண்டுபண்ணும்  என்றார்.

அந்தச்  செய்தியாளர்  கூட்டத்தில்  இருந்த  மலேசியாவுக்கான  சீனத்  தூதர்  ஹுவாங்  ஹுய்காங்,  மலேசியா  பாதுகாப்பு  நடவடிக்கைகளை  மேம்படுத்திச்  சுற்றுப்பயணிகளின்  பாதுகாப்பை  உறுதிப்படுத்த  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டார்.