அரசாங்கத்தைக் குறைகூறுவதும் நாட்டைக் குறைகூறுவதும் ஒன்றல்ல

dewanஉங்கள்  கருத்து ‘மலேசியாவைப்  பற்றிக்  கவலைப்படுகிறோம்,  அதனால்தான்  அரசாங்கத்தைக்  குறை கூறுகிறோம்’

ஷஹிடான்: மலேசியாவைப்  பற்றி  வெளிநாடுகளில்  பொல்லாங்கு  பேசுதல்  ஒழுக்கக்கேடான  செயலாகும்

டான் கிம்  கியோங்: நாடாளுமன்றத்தில்  கேட்கப்பட்ட  கேள்விக்கும்  பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிமின்  பதிலுக்கும்  என்ன  தொடர்பு?

வெளிநாடுகளில்  தகவல்களைக்  கசியவிடுவது  உளவுசொல்லுதல்  ஆகுமா  என்ற  வினவலுக்கு  மலேசியாவைப்  பற்றியும்  அரசாங்கத்தைப்  பற்றியும்    வெளிநாடுகளில்  பொல்லாங்கு  பேசுதல்  ஒழுக்கக்கேடான  செயலாகும்  என்று  பதிலளித்துள்ளார்.

அறிவார்ந்த  பேச்சு: ஷஹிடான்,  பிஎன்  அரசாங்கத்தைக்  குறைசொல்வதும்  மலேசியாவைக்  குறைகூறுவதும்  ஒன்றல்ல.  மலேசியாவைப்  பற்றிக்  கவலைப்படுகிறோம்,  அதனால்தான்  நாட்டை  அழிவுக்கு  இட்டுச்  செல்லும்  வீணாய்ப்போன  அரசாங்கத்தைக்  குறை கூறுகிறோம்.

ஆரிஸ்46: நாங்கள்  எதற்குப்  போய்ச்  சொல்லிக்கொண்டிருக்க  வேண்டும்,  இங்கு  நடப்பது  உலகத்துக்குத்  தெரியாதா  என்ன.

இங்கிருந்து குடிபெயர்ந்து  சென்ற  மில்லியன்  கணக்கான  மலேசியர்கள்  எது  தங்களை  நாட்டை  விட்டுத்  துரத்தியது  என்பதை  உலகத்தாருக்குச்  சொல்லி  இருப்பார்கள், ஐயா.

ஓடின்: ஷஹிடான்,  சக  பிஎன்  அரசியல்வாதிகள்போலவே  உங்களுக்கும்  மேல்மாடி காலி  என்பதைக்  காண்பித்துக்  கொண்டிருக்கிறீர்கள். மலேசியா  வேறு உங்கள்  அரசாங்கம்  வேறு.

எந்த  மலேசியரும்  மலேசியாவைக்  குறை  சொல்ல  மாட்டார்.

ஆனால்,  ஒழுங்கீனச்  செயல்களைச்  செய்யும்  அரசாங்கத்தைக்  குறைகூறுவது  ஒழுக்கக்கேடு  ஆகாது.

நெகாராவான்: அம்னோவின்  பேராசையின் காரணமாகவும்  திறமையின்மையின்  காரணமாகவும்  மலேசியா  தோற்றுப்போன  நாடாகி  விட்டது.  நாட்டைப்  பற்றிப்  “பொல்லாங்கு  பேசுவதாக” வேறு  யாரையும்  குற்றம்   சொல்ல வேண்டாம்.  அம்னோவே  அதைச்  சிறப்பாக  செய்து  வருகிறது.

சுதந்திரமான  நியாயமான  தேர்தல்:  ஷஹிடான்  அவர்களே,  முதலில்  உங்கள்  பிஎன்  அரசாங்கத்திடம்  நம்  ஜனநாயக  முறைக்கு  உரிய  மதிப்பும்  மரியாதையும்   கொடுக்கச்  சொல்லுங்கள்.

எனக்கு  மலேசியாவைப்  பிடிக்கும். பிஎன்னையும்  அதன் இனவாதத்தையும்தான்   பிடிக்காது.

பெயரிலி #06188481:  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்தான்  சொன்னாரே,  போரில்  எல்லாமே  நியாயம்தான்  என்று.  அப்புறம்  ஏன்  இந்த அங்கலாய்ப்பு?

பிஎன்தான்  பக்காத்தான்மீதும்  சில  என்ஜிஓகள்மீதும்  போர்  தொடுத்துள்ளதே.

சமரசவாதி: அதேபோல், அரசாங்கத்தின்  சார்பில்  பொய்மூட்டைகளை  அவிழ்த்து  விடுவதும்,  சிறுபான்மையினரை  ஒடுக்கிவைத்து  அவர்களின்  உரிமைகளை  மறுப்பதும்,  கையூட்டு வாங்குதும்  கொடுப்பதும்,  “சேவைக்  கட்டணம்”  என்ற பெயரில்  ரிம500 மில்லியன்  கொடுப்பதும்கூட  ஒழுக்கக்கேடான  செயல்கள்தான்.

டாக்:  வெளிநாடுகளுக்குச்  செல்லும்போது  மலேசியா, இயற்கைப்  பேரிடர்  இல்லாத  அழகான  நாடு  என்று  புகழ்ந்துரைப்பது  என்  வழக்கம்.

இங்குள்ள  ஒரே  பேரிடர்,  அம்னோ-பிஎன்  நாட்டை  ஆள்வதுதான்