துணைப் பிரதமரின் 5-நாள் டூபாய் சுற்றுப்பயணம் தேவைதானா? எம்பிகள் கேட்கின்றனர்

1mpடிஏபி  எம்பிகள்  இருவர்,  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  பெரும்  பொருள்  செலவில்  5-நாள்  டூபாய்  சுற்றுலா  மேற்கொண்டிருப்பது  தேவைதானா  என்று  கேள்வி  எழுப்பியுள்ளனர். முகைதின், பயணத்தில்  வேலை  செய்வதைவிடவும்  பெரும்பகுதி  நேரத்தை  கோல்ப்  திடலில்  செலவிடுவதுபோலத்  தெரிகிறது  என்றவர்கள்  குறிப்பிட்டனர்.

புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி  ஸ்டீபன்  சிம்மும்,  புக்கிட்  பெண்டாரா  எம்பி  ஸைரில்  கீர்  ஜொஹாரியும்,  இணையத்தில்  ஒருவர்  வெளியிட்டிருந்த  முகைதினின்  5-நாள்  பயண  நிரலை  அடிப்படையாக  வைத்து  இவ்வாறு  கூறினர்.

இப்பயணத்துக்கான  பணத்தைச்  செலவிடுவது  யார்  என்றும்  எம்பிகள்  வினவியுள்ளனர். “சிறப்பு  விமானத்தில்”  பயணம்  மேற்கொள்ளப்பட்டதாகவும்  தெரிகிறது.

மலேசியாகினி  துணைப்  பிரதமரின்  உதவியாளரைத்  தொடர்புகொள்ள  முயன்று  வருகிறது.