மலேசியாகினி பொறுப்பற்ற ஊடகம் என உத்துசான் கடும்தாக்கு

mkiniஅம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா  மீண்டும்  மலேசியாகினிமீது  குற்றப்பத்திரிகை  வாசித்துள்ளது.  அந்த  இணையச்  செய்தித்தளம் அதன்  சந்தாதாரர்களின்  கருத்துக்களைத்  தணிக்கை  செய்யாமல்  அப்படியே  போட்டு  விடுகிறதாம்.

மலேசியாகினியைக்  குற்றம்சொல்லி  நீண்ட  கட்டுரை  வரைந்துள்ள  அதன்  ஆசிரியர்களில்  ஒருவரான  சுல்கிப்ளி  பக்கார்,  அவ்விணையத்  தளம்,  அதன் “மாற்றணி-ஆதரவு”  வாசகர்கள்  எப்படிப்பட்ட  கருத்துக்களையும்  “கட்டுப்பாடின்றி” பதிவுசெய்ய  இடமளிக்கிறது  என்றும்  வாசகர்களின்  கருத்துக்களுக்கு  தான்  பொறுப்பில்லை  எனப்  பொறுப்பைத்  தட்டிக்கழிக்கிறது  என்றும்  கூறினார்.

 

“அக்கருத்துக்கள்  சமூகத்துக்கும்  நாட்டுக்கும்  தீங்கு  விளைக்குமா  என்பதெல்லாம்  அவர்களுக்கு  இரண்டாம்பட்சம்தான். இதைத்தான்  சுதந்திரம்  என்று  கூறிக்கொள்கிறது  மலேசியாகினி”,  என்றவர்  சாடினார்.

கருத்துக்களுக்கும்  தனக்கும்  பொறுப்பில்லை  என்று   போட்டுக்கொள்வது  மலேசியாகினி  “பொறுப்பற்றது”  என்பதைக்  காண்பிப்பதாக  சுல்கிப்ளி  கூரினார்.