பிள்ளைகளின் மதமாற்றத்தை இரத்துச் செய்ய விரும்புகிறார் தாயார்

deepaதம்  பிள்ளைகளின்  மதமாற்றத்தை  இரத்துச்  செய்ய  வேண்டும்  என்பதில்  உறுதியாக  இருக்கிறார்  எஸ்.தீபா.  கடந்த  வாரம்  சிரம்பான்  உயர்  நீதிமன்றம்,  பிள்ளைகளைப்  பராமரிக்குக்  பொறுப்பைத்  தம்மிடம்  ஒப்படைத்தபோதுக்கூட  அவருக்கு  இந்த  எண்ணம்  வரவில்லை.

ஆனால்,  முன்னாள்  கணவர்  இஸ்வான்  அப்துல்லா,  தம்  ஆறு-வயது  மகனைக்  கடத்திச்சென்றதை  அடுத்து  பிள்ளைகளின்  மதமாற்றத்தை இரத்துச்  செய்ய  வேண்டும்  என்று  உறுதிபூண்டிருப்பதாக  தீபா  மலேசியாகினியிடம்  கூறினார்.

“18 வயாதான  பின்னர்  எந்தச்  சமயத்தில்  இருப்பது  என்பதை  அவர்களே  தேர்ந்தெடுக்கலாம். நான்  இஸ்லாத்துக்கு  எதிரி  அல்ல.  என்  குடும்பத்தில்  முஸ்லிம்கள்  உண்டு”,  என்றாரவர்.  தீபாவின்  தாயார்,  சித்தி  ஆய்ஷாவும் இஸ்லாத்துக்கு  மதம்  மாறியவர்தான்.