மூன்றாவது தடவையாக எம்எச்370-ஐத் தேடி கடலடிக்குச் சென்றது புளுஃபின் நீர்மூழ்கி

bluefin-21எம்எச்370  கடலடி  தானியங்கி கலமான  புளுஃபின்-21,  இன்று  காலை  தொழில்நுட்பப்  பிரச்னை  காரணமாக  தேடல்  முயற்சியைக் கைவிட  நேர்ந்ததாக  கூட்டு  ஒசுங்கிணைப்பு  மையம் (ஜேஏசிசி)  கூறியது.

பின்னர், பிரச்னை  சரிசெய்யப்பட்டு,  அமெரிக்கக்  கடற்படைக்குச்  சொந்தமான  புளுஃபின்-21,  எம்எச்370-இன்  உடைந்த  பகுதிகளைத்  தேடும்பணியைத்  தொடர்வதற்காக   மீண்டும்  கடலடிக்கு  அனுப்பப்பட்டது.

“அது  இப்போது  கடலடியில்  தேடலைத்  தொடர்கிறது”,  என்று  தெரிவித்த  அம்மையத்தின்  அறிக்கை,  காலையில்  அது  திரட்டிய  தகவல்களில் “குறிப்பிடத்தக்க  தடயங்கள்  எதுவும்  இல்லை”  என்றும்  சொன்னது.