சைபுடின்: என்னால் அஸ்மினுடனும் காலிட்டுடனும் இணைந்து பணிபுரிய முடியும்

saiதாம்  பிகேஆர்  துணைத்  தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும்கூட  அப்பதவிக்குப்  போட்டியிடும்  மற்ற  வேட்பாளர்களான  அஸ்மின்  அலியுடனும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமுடனும்  சேர்ந்து  பணியாற்றுவதில்  எந்தப்  பிரச்னையும்  இராது  எனத்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  கூறினார்.

எதிர்வரும்  கட்சித்  தேர்தலில்  மூவரும்  துணைத்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிட்டாலும்  தங்களால்  எதையும் மனம்விட்டுப்  பேச  முடியும்  என்பதை  சைபுடின்  வலியுறுத்தியதாக  சினார்  ஹரியான்  கூறுகிறது.

“கொள்கைகள்  விசயத்தில்  ஏதாவது  கருத்துவேறுபாடு  இருக்குமானால் அதை  அப்துல்  காலிட்டிடம் நேரடியாக  தெரிவிப்பேன். அது  அவருக்கும்  தெரியும்”,  என்றாரவர்.

அதேபோல்  அஸ்மினும்  தாமும்  தொடக்கநாளிலிருந்தே  பிகேஆர்  திட்டங்களில்  ஈடுபட்டு  வந்திருப்பதால் ஒருவரை  மற்றவர்  நன்கு  புரிந்து  வைத்திருப்பதாகவும்  அவர்  சொன்னார்.