மே 1 பேரணி: அமைதிக்கு மிரட்டல் என்றால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்

polisமே1 ஜிஎஸ்டி-எதிர்ப்புப்  பேரணி  பொது ஒழுங்குக்கு  மிரட்டலாக  இருக்கும்  எனத்  தெரிந்தால்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும்  என  கோலாலும்பூர்  குற்றப்புலனாய்வுத்  துறை (சிஐடி)  துணைத்  தலைவர்  ஏசிபி  கைரி  அஹ்ராசா  கூறினார்.

பேரணி  நடப்பதைத்  தடுக்க  போலீசார்  முன்- கைது  நடவடிக்கைகளை  மேற்கொள்வார்களா  என்று  செய்தியாளர்கள்  வினவியதற்கு   கைரி  அவ்வாறு  கூறினார்.

“அமைதியை  நிலைநிறுத்துவதே  எங்கள்  நடவடிக்கைகளின்  நோக்கமாகும். பொது  ஒழுங்குக்கு  மருட்டல்  ஏற்படும்  என்று தோன்றினால்  நிச்சயமாக  நடவடிக்கை  எடுப்போம்”,  என்றாரவர்.