காலிட்: நீர்ப்பங்கீடு நாளை முடிவுறும்

water1கிள்ளான்  பள்ளத்தாக்குக்  குடியிருப்பாளர்கள்  நிம்மதி  பெருமூச்சு  விடலாம். அங்கு  நீர்ப் பங்கீடு  நாளை  முடிவுக்கு  வருவதாக  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  அறிவித்துள்ளார்.

இன்று  பிற்பகல் ஷா  ஆலமில்  செய்தியாளர்  கூட்டமொன்றில் அப்துல்  காலிட்  இதனை  அறிவித்தார்.

முன்னதாக  காலையில்,   பெர்லிஸில்,  நீர்ச்  சேவை  ஆணையத்தின்  தலைவர்  இஸ்மாயில்  காசிமும் அதே  அறிவிப்பைச்  செய்திருந்தார்.

சுங்கை  சிலாங்கூர்  அணைக்கட்டில்  40.23 விழுக்காடு  நீர்  நிறைந்ததை  அடுத்து  அம்முடிவு  செய்யப்பட்டதாக  காசிம்  கூறினார்.