சரவாக்கின் பாத்தாங் சாடோங் தொகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்திருப்பதால் பிகேஆரின் மத்திய தேர்தல் குழு(ஜேபிபி) அத்தொகுதியை இரத்துச் செய்துள்ளது.
மேலும், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதித் தலைவர் உள்பட, கட்சியின் தலைமைப் பொறுப்புகளுக்கு வெற்றிபெற்றவர்களை கட்சிநீக்கம் செய்யவும் அக்குழுவின் தலைவர் ஜொஹரி அப்துல் கட்சியின் ஒழுங்கு வாரியத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்
கட்சித் தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக கண்டறிந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பீராக….”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற மெத்தனப்போக்கு வேண்டாம்….. தேர்தல் நிலவரத்தினை (ஆர் ஒ எஸ்) ஆந்தைபோல் கண்கானித்துக்கொண்டிருக்கும்!!!!