சுமத்ராவில் நில நடுக்கம்: சிலாங்கூரிலும் பேராக்கிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டன

நேற்றிரவு  10.35க்கு,  சுமத்ராவின்  நியாஸ்  தீவுகள் வட்டாரத்தில் 5.7 ரிக்டர்  அளவு கொண்ட நில  நடுக்கம்  தாக்கியது. அதன்  அதிர்வுகள் பேராக்கிலும்  சரவாக்கிலும்  பல  இடங்களில்  உணரப்பட்டன.

நில நடுக்கம்,  நியாஸ்  தீவுகளிலிருந்து  68 கிலோ மீட்டர்  தொலைவிலும்  சாபாக்  பெர்னத்திலிருந்து  408  கிலோ  மீட்டர்  தொலைவிலும்  மையம்  கொண்டிருந்ததாக  மலேசிய  வானிலை  ஆய்வுத்  துறை  கூறியது.