பாஸ் ஹுடுட் அமலாக்கத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என அம்னோ உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார். அது ஒரு “அரசியல் தந்திரம்” எனக் கூறப்பட்டிருப்பதை அடுத்து அவர் இவ்வாறு வினவினார்.
பாஸ் மலாய் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக்கொள்ளவே அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக் மலேசியாகினியிடம் கூறியதை வைத்து அஹ்மட் ஜாஹிட் அவ்வாறு கேட்டார்.
“அது உண்மையானால், மலாய்க்காரர் ஆதரவைத் தன் பக்கம் இழுக்க பாஸ் மலாய்க்காரர்களை ஏமாற்றி வந்துள்ளது”,என்றாரவர்.


























ஹூடுத்துக்கு முதல் எதிரியே அம்னோதான். இல்லையெனில் ஹூடுத் திட்டத்தில் அம்னோவின் நிலைப்பாட்டை உறுதியாக, வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே???? இந்த கண்ணாம்மூச்சி விளையாட்டெல்லாம் யாருக்கு தெரியாது???? அம்னோ தலைவர்கள் கையில்லாக் கோலத்தினை அனுபவிக்க எப்படி சம்மதிப்பார்கள்???? பிறகு வண்டவாளம் தண்டவாளத்திலென்ன நடுத்தெருவிலும் அம்மணமாக ஓடும்….
இப்போது கர்பால் இல்லை பாஸ் ஹுடுட்டை தாரளமாக நடைமுறை படுத்தலாமே.அப்ப இவ்வளவு நாள் பாஸ் போட்டது வேசமா? நாடகமா? ஏமாற்றியதா?சொல்லுங்க பாஸ் சொல்லுங்க பாஸ்.
அம்னோவின் பெயரால் நாட்டையே கொள்ளை யடிக்கும் இந்த ஜகிட் கூட்டம் தான்.நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை இந்த கொள்ளையர்கள் கூட்டம் கடந்த 57 ஆண்டுகளாக கொள்ளை அடித்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் பைய பைய உணர்ந்து வருகின்றனர்.மலேசியா இந்திய சமுதாயமும் விழித்துக் கொண்டு வருகிறது.ஆகவே இந்த கொள்ளையர்களின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்.இந்தியர்களை மாற்றுவோம்.நாமும் முன்னேறுவோம் வாரீர்.